இதுவரை 38 பேர்! இன்னும் எத்தனை பேரோ?

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிய உறவினர்களில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் போனோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் காணாமல் போனோரை ஒப்படைக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்த பின்பு இதுவரை 38 பேர் தமது உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் காணாமல் போன எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகள் மட்டுமே என்றும் எமது பதிவுகளுக்குட்படாதவர்களின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டியதை விட அதிகமாக இருக்குமென கணிப்பிடுகின்றோம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.